Monday, September 17, 2012

உன்நிலை நானறிவேன்

உன்நிலை நானறிவேன்
என்நிலை நீயறியவில்லை
என்னால் தெரியபடுத்தவும்
முடியவில்லை – ஏனெனில்
என்நிலை நீயறிந்தால்
உன்நிலை என்னவாகும்
என்பதை நானறிந்து

இழப்புக்களை சுமப்பது
என் தலையெழுத்து
துன்பங்களில் திகழ்வது
என் வாழ்வு தந்த பாடம்
என்நிலையறியாது வாழ்வது
எடுத்த முயற்ச்சியின் விளைவு
விதியை மதியால்
வெல்ல முடியுமென்பதை
அறிந்து
நான் உன் விதியை
நினைத்து
என் விதியை மதியால்
மாற்றிகொண்டேன் என்
நிலையறிந்து

பூவாக மலர்ந்து
பூவாக வாடாமல் இருவர்
நிலையறியாது
ஒருவருக்கொருவர்
வாடாத பூவாக
இருப்போம் என்றென்னி
இறுதியில் நீ
மட்டும் வாடாத
பூவாக இருப்பதே
நன்றென்று
வாடிய பூவாக என்னை
மாற்றிக்கொண்டேன்

நீ
என்நிலையறியாது
நினைவுகளையகற்றி
உன்நிலையறிந்து
வாழ வேண்டும்மென்று
நீ வாழ்க
எங்கிருந்தாலும்
நீ வாழ்கவென
வாழ்த்துகிறேன்

Sunday, August 26, 2012

புழுதி


எல்லோரும் புழுதியைத் துடைத்துவிட்டு
உட்கார்கிறார்கள்
நான் புழுதியின்மீதே உட்காருகிறேன்

நானும் புழுதி என்பதும் ஒன்று

என் மேலும் படியட்டும் புழுதி என்பது
இன்னொன்றாக இருக்கலாம்

உலகத்தில் துடைக்க முடியாதது
எவ்வளவோ வேறு இருக்கிறது
என்னையும் புழுதியையும் தவிர

காதலால்..!

அமைதியாக 
இருக்க நினைத்து 
தோற்றுக் கொண்டிருக்கிறது
மனது

வார்த்தைகள் தொலைத்து
விழிகளில் உருவாகி
மௌனத்தால் கருவாகி
இதயத்தால் உயிரூட்டப்பட்ட
காதலால்..!

உடைந்த நிலாக்கள்


நான் சுகம் நீயும்....

இறந்த உடலைக்கூட
புணர நினைக்கும் உலகில்
என் இருப்பை
என் நலத்தை
எப்படித் தீர்மானிக்க முடிகிறது
உன்னால்.

கை கோர்க்க நீயானானாலும்
பறித்திழுக்கும் சமூகத்தில்
எப்படி....
என் வாழ்வின் இருப்பை
நுகர்வாய் நீ.

வௌவாலாய் தொங்கும் உலகில்
எனக்கு உலகமும்
உலகத்துக்கு நானும்
தலைகீழாய்த்தான்.

உள்ளதை உள்ளபடி
ஏதாவது எழுதலாம் என்றால்
இருளுக்குள் கௌவும்
எத்தனை எத்தனை
அசிங்க உணர்வுகள்
ஆபாசமாய்.

பாம்புச் செட்டையாய்
பிறந்த இனம் குணம்
ஏன் மதத்தைக்கூட மாற்றும்
பச்சோந்திக் கூட்டத்துள்
சிதறிய பரவசங்களோடு.

என்னைப் புரியாத உறவு
மனதைப் புரியாத நட்பு
விலக நினைக்கும் ஆனந்தம்
தூரமாய் நிற்கும் காதல்.

எனக்கான
அழகான ஓர் உலகத்துள்
நான் மட்டுமே.

தவம் செய்கிறேன்
கண்களைக் கழற்றி
காற்றில் கொழுவி
பொய்யாய்த் தொங்காத
ஒரு மனிதனுக்காக.

P.vijai.

Wednesday, July 11, 2012

♥ ♥ ♥ உன் முகம் காண வேண்டும் ♥ ♥ ♥

♥ ♥ ♥
உன் முகம் காண வேண்டும்
உன் முகம் கண்டு நான் நீயாக வேண்டும் எனக்குள்ளே..,
பூக்கும் என் காதல்
உன்னையேசேர வேண்டும்
 ♥ ♥ ♥

இதயமே என்னை மறந்தது ஏன்


இதயமே இதயமே என்னை மறந்தது ஏன்
பிரிவு எனும் துயறிலே என்னை தள்ளியதேன்
உன் பெயர் சொல்லி நான் பைத்தியம் ஆனேன்
நிழல் என தொடர்ந்தேன் அதை நீ அறிவாயோ?
நிழல் தர நீ இங்கு வருவாயோ?
இதயமே இதயமே என்னை மறந்தது ஏன்

பொன்னை போல் பூவை போல் உன்னை சூடி கொண்ட நான் இன்று வாடி கிடப்பதோ?
பிரிவிங்கே உண்மை தான் என்றால் உறவு என்னையா வாழ்வது கனவு பூமியா?
பாதைகள் இல்லை என்றால் பயணங்கள் போவதோ
நம் குற்றம் என்ன ஏதோ தெய்வத்தை நோவதோ
யாரிடம் என்ன சொல்வது இனி சேரும் இடம் இங்கு வேரேது
இதயமே இதயமே என்னை மறந்தது ஏன்

எங்கோ நீ இருக்கின்றாய் என்றே உள்ளம் சொல்லுதே அதில் என் உயிரும் உள்ளதே
கண்ணுக்குள் தூங்கிடும் கங்கை கன்னம் இறங்குதே அதுவும் உன்னை தேடுத்தே
நீ பார்த்த நிலவு இங்கே நீ எங்கே தெய்வமே
வாராமல் நீ இருந்தால் வாழ்வேது நெஞ்சமே
கூவிடும் குயில் வாடுது ஒரு கூண்டு எங்கே இது நியாயமோ?

என் இனியவளுக்கு............


உன்னையே உயிராக எண்ணிய
என் மனம் தெளிந்துவிட்டது இன்று
உன் பொழுதுபோக்கிற்காகத்தான்
நீ காதல் எனும் நாடகம் ஆடினாய் என்று....

ஆனால்......
உன் நடிப்பால் ஏமாறிய என் இதயமோ
நான் சொல்லும் உண்மையை கேட்க மறுக்கிறது
உன்னையே எண்ணி நித்தம் தவிக்கிறது....

எனக்காக ஒரு உதவி செய்வாயா....
நீ உடைத்த என் இதயத்திற்கு நீயே சொல்லிவிடு
நீ என்னுடன் பழகியது ஒரு பொய் நாடகமே என்று....

உன்னிடமும் என் இதயம் ஒரு கேள்வி கேட்கிறது
நீ என்னை விரும்பாவிடிலும் நான் உடைந்திருக்கமாட்டேன் இன்று....

ஆனால்....
நீ ஏன் விரும்புவது போல் நடித்து ஏமாற்றி என்னை உடைத்தாய், வலிக்கிறது...
என் துடிப்பை மட்டும் இன்னும் ஏன் நிறுத்தாமல் உன் மெளனத்தால்
வதைத்துக்கொண்டு இருக்கிறாய் ????

About Me

குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..