Monday, September 17, 2012

உன்நிலை நானறிவேன்

உன்நிலை நானறிவேன்
என்நிலை நீயறியவில்லை
என்னால் தெரியபடுத்தவும்
முடியவில்லை – ஏனெனில்
என்நிலை நீயறிந்தால்
உன்நிலை என்னவாகும்
என்பதை நானறிந்து

இழப்புக்களை சுமப்பது
என் தலையெழுத்து
துன்பங்களில் திகழ்வது
என் வாழ்வு தந்த பாடம்
என்நிலையறியாது வாழ்வது
எடுத்த முயற்ச்சியின் விளைவு
விதியை மதியால்
வெல்ல முடியுமென்பதை
அறிந்து
நான் உன் விதியை
நினைத்து
என் விதியை மதியால்
மாற்றிகொண்டேன் என்
நிலையறிந்து

பூவாக மலர்ந்து
பூவாக வாடாமல் இருவர்
நிலையறியாது
ஒருவருக்கொருவர்
வாடாத பூவாக
இருப்போம் என்றென்னி
இறுதியில் நீ
மட்டும் வாடாத
பூவாக இருப்பதே
நன்றென்று
வாடிய பூவாக என்னை
மாற்றிக்கொண்டேன்

நீ
என்நிலையறியாது
நினைவுகளையகற்றி
உன்நிலையறிந்து
வாழ வேண்டும்மென்று
நீ வாழ்க
எங்கிருந்தாலும்
நீ வாழ்கவென
வாழ்த்துகிறேன்

No comments:

Post a Comment

About Me

குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..