Wednesday, May 25, 2011

அவன் அழகு...

அவன் அழகு...

பௌர்னமி நாளன்றாவது
உன் முகத்தை மறைத்துக்கொள்.
அந்த ஒரு நாளாவது
வாய்புக்கொடு
அதன் அழகை வெளிப்படுத்த
அந்த நிலவுக்கு

by..sifani(akp)

Thursday, May 19, 2011

எனக்காய் பிரார்தனை செய்வாயா? தோழி..!!

உனக்காக இருந்தவன் -
உருக்குலைந்து நிற்க்கிறேன்
மென்மையானவன் என்பாயே
மிருகமாய் நிற்க்கிறேன்.

என் சிரிப்பு பிடிக்கும் என்பாயே
நான் இப்போ சிதைந்து போய் நிற்க்கின்றேன்.

அறிவுரை கேட்டு அடம்பிடிப்பாயே.
நான் இப்போ அறிவிழந்து நிற்கிறேன் தேழி..
எனக்காக நீ பிரார்தனை செய்வாயா
என்னுயிர் தோழி..!!

இடைவெளி

உனக்கும் எனக்குமான
இடைவெளியில்
பயணிக்கிறது
ஓர் மௌனம்....

மௌனம் வளர்க்கும்
அமைதியின்
ஊடலில் நீ...

மௌனம் உடைக்கும்
வார்த்தையின்
தேடலில் நான்...

இப்போது
ஊடலுக்கும் தேடலுக்குமான
இடைவெளியில்
பயணிக்கிறது
நம் காதல்...

அது காதல் இல்லை என்று

காதல் பாடல்களைக் கேட்கும் போது
காரணமில்லாமல் நினைவில் வந்தாய்
காதல் வசனங்களைக் கேட்கும் போது காரணமில்லாமல்
நினைக்க வைத்தாய்
காதல் ஓவியங்களைப் பார்க்கும் போது
காரணமில்லாமல் கனவாய் வந்தாய்

அப்போது புரியவில்லை
காதலிக்க காரணம் தேவையில்லை என்று
இப்போது புரிகிறது
காரணத்தோடு வந்தால்
அது காதல் இல்லை என்று

- (ச‌த்யா -keetru)

முதன் முதலாய் அம்மாவுக்கு

கவிப்பேரரசு வைரமுத்முத்துவின் பாச வரிகள்
முதன் முதலாய் அம்மாவுக்கு ...........

ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரு(மை)ம
ஒத்தவரி சொல்லலையே!

காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமாப் போனேனோ?

பொன்னையாத் தேவன் பெத்த
பொன்னே! குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புல்வலி பொறுத்தவளே!

வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு

கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாணப் பிறந்தவனோ?
தரணிஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?

இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
நெனச்சா அழுகவரும்

கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே

தொண்டையில் அதுஎறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

திக்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்புமேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்

வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம(ப்)
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேலையிலே
பாசம்வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போபபின்னே

அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!

வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே!

எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?

Wednesday, May 18, 2011

பிடிக்கும்

கண்ணீர் எனக்கு பிடிக்கும்
அது எனக்கு கவலை இருக்கும் வரை

இரவுகள் எனக்கு பிடிக்கும்
அது விடியாமல் இருக்கும் வரை

உன் அன்பு எனக்கு பிடிக்கும்
அது பிரியாமல் இருக்கும் வரை

About Me

குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..