உன்னையே உயிராக எண்ணிய
என் மனம் தெளிந்துவிட்டது இன்று
உன் பொழுதுபோக்கிற்காகத்தான்
நீ காதல் எனும் நாடகம் ஆடினாய் என்று....
ஆனால்......
உன் நடிப்பால் ஏமாறிய என் இதயமோ
நான் சொல்லும் உண்மையை கேட்க மறுக்கிறது
உன்னையே எண்ணி நித்தம் தவிக்கிறது....
எனக்காக ஒரு உதவி செய்வாயா....
நீ உடைத்த என் இதயத்திற்கு நீயே சொல்லிவிடு
நீ என்னுடன் பழகியது ஒரு பொய் நாடகமே என்று....
உன்னிடமும் என் இதயம் ஒரு கேள்வி கேட்கிறது
நீ என்னை விரும்பாவிடிலும் நான் உடைந்திருக்கமாட்டேன் இன்று....
ஆனால்....
நீ ஏன் விரும்புவது போல் நடித்து ஏமாற்றி என்னை உடைத்தாய், வலிக்கிறது...
என் துடிப்பை மட்டும் இன்னும் ஏன் நிறுத்தாமல் உன் மெளனத்தால்
வதைத்துக்கொண்டு இருக்கிறாய் ????
sila widayabgalai nadippendru sandehikkum podudaane idayame udaindu norunguhiradu.
ReplyDelete